20 வயது முதல் 25 வயது வரை .
இந்த பருவம் பெரும்பாலும் ஆண்களுக்கு , அழகிய கடினமான பருவம் என்று நினைக்குறேன் .
இந்த பருவத்தில் தான் , ஆண்கள் . பையனிலினருந்து ஆண்மகனாக மாறும் பருவம் .
இதை எழுதும் எனக்கு வயது 21 .
இந்த கட்டுரை பெரும்பாலும் , வசதி படைத்த குடும்ப ஆண்களுக்கு ஒத்து போகாது . நடுத்தர குடும்ப ஆண்களுக்கான , ஆண்களிடம் இருந்து கிடைத்த பதிவு இது .
இதில் எனது அனுபவம் மற்றுமல்லாமல் , எனது நண்பர்களின் அனுபவங்களையும் சிலவற்றை அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் , பொதுவாக குறிப்பிட்டிருப்பேன் .
20 முதல் 25 வரை .
இந்த பருவம் தான் , நாம் வேலை தேடும் பருவமாக இருக்கிறது . தேடி , திரிந்து அலைந்து எப்படியாவது ஒரு வேலையில் உட்கார்ந்து விடுகிறோம் .
வேலை சேரும் போது , அப்பிடியே படி படியா ... வீடு , வாசல் வாங்கும் கனவு . 25 வயதில் தங்களது 20,000 ரூபாய் , 30,000 வேலையை தக்க வைத்து கொண்டால் போதும் என்பது போல் பலருக்கு ஆகி விடுகிறது .
காரணம் குடும்ப சூழல் . Risk எடுத்து தோற்றுவிட்டால் நம்மை நம்பிய குடும்பம் வறுமையில் வாடும் என்பதன் பயம் .
பின்பு தங்கள் வாழ்நாளின் கடைசி வரை அந்த 20,000 முதல் 30,000 சம்பலத்திற்குள் . நமக்கு பிடித்த விஷயம் ஒன்று கூட விரும்பி செய்ய முடியாமல் அடக்கி கொண்டு வாழ்கிறார்கள் பலர் .
இதில் சிலர் , அந்த 30,000 சம்பளத்தில் வயிற்றை கட்டி , வாயை கட்டி . சிறியதாக EMI ல் வீடு வாங்கி தங்கள் வாழ்நாள் முழுவதும் EMI கட்டுவதிலேயே கழித்து விடுகின்றனர் .
அதற்காக தங்கள் , கனவை , ஆசையை , காதலை தொலைத்த இளைஞர்கள் எத்தனை பேர் .
இந்த பருவத்தில் தான் . நம் காதலை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது .
Teenageல் வந்தாலும் . இந்த பருவத்தில் தான் ஒரு maturity ல் வாழ்க்கைக்கான சிந்தனைகளுடன் காதலிக்க இயல்கிறது .
பெரும்பாலும் time pass காதலாக போனாலும். பெரும்பாலும் உண்மை காதல்களும் இருக்கத்தான் செய்கிறது .
அதில் சிலரே காதலை கரம் பிடிக்கின்றனர் .
பலர் போராட முடியாமல் . வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தால் , status காரணத்தால் , ஜாதி மத பிரிவின் காரணத்தால் . தங்களின் காதலை மனதில் மட்டும் சுமந்து வாழ்கின்றனர் .
இதில் கொடுமை என்ன வென்றால் . இளைஞர் கல்லூரி முடித்ததும் . அவர்களது காதலிக்கு திருமணம் ஆகி விடுகிறது .
இவன் வேலை தேடி திரியும் சமயம் அவளுக்கு குழந்தையே பிறந்து விடுகிறது . பெரும்பலும் இப்படி தான் . ஆனால் சில இடங்களில் . தங்களின் காதலிக்கு 30 வயது ஆன பின்னும் திருமணம் ஆகாமல் தானும் அவளை கரம் பிடிக்க இயலாமல் . அவன் படும் பாடு மிக வலி மிக்கது .
இதில் இந்த 20 முதல் 25 வயது . பருவ ஆண்கள் பலருக்கு அந்த சேரா காதலே கனவாக தான் இருக்கும் . ஒருதலை ராகமகே போய் விடும் அவர்களின் காதல் .
பெண்களை பற்றி பேசும் போது . அக்கா , தங்கையுடன் பிறந்த நடுத்தர குடும்ப ஆண்களுக்கு பொறுப்பு இன்னும் கூடுதலாக இருக்கிறது . அண்ணன் , தம்பியுடன் பிறந்த ஆண்களை காட்டிலும் .
அவர்களை கரை சேர்க்க , இவன் எதிர் நீச்சல் போடும் கட்டாயம் வந்து விடுகிறது . அதற்காக தங்களின் கனவை துளைத்தவர்கள் எத்தனை பேர் .
இதில் பெரும் துயரம் , அப்பா , அம்மா சிலருக்கு இருவரும் இல்லாத நிலையில் . உடன்பிறந்த அக்கா , தங்கை இருக்கும் ஆண்கள் .
அவர்கள் அவர்களின் சகோதரிகளுக்கு கூட திருமணம் செய்து முடித்தாலும் . அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் பாடு பெரும் பாடு .
இது அனைத்தையும் face பண்ணி . ஒருவன் நல்ல நிலைமையில் பெரிய ஆளாக வரும் ஆண்களும் சிலர் இருக்கின்றனர் . ஆனால் அவர்கள் அந்த நிலைமைக்கு வருவதற்குள் இந்த சமூகம் அவர்களை போட்டு ஒரு வழி பணி விடும் .
இதை 99% பணக்கார வீட்டு பசங்க உணரது கஷ்டம் .
வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பத்து ஆண்களின் இரவுகள் நீண்டவை . கொடூரமானவை . அவர்களின் எண்ணங்களே அவர்களை ஒரு வழி செய்யும் .
இது அனைத்தும் தாங்கி . கல்லில் இருந்து உருவாகும் சிலை போல . சிலர் ஜெய்கிறார்கள் . பலர் அடியை தாங்காத கல் போல உடைகிறார்கள் .
அதில் நம்முடன் படித்த சிலர் , settle ஆகி விடுவார்கள் . அதை பார்த்து சில ஆண்கள் படும் ஏக்கம் . அருகில் இருந்து அவர்களை பார்த்தால் தான் உணர முடியும் .
நகையாக சொல்ல வேண்டும் என்றால் . இத்தனையும் கடந்து அவனுக்கு கல்யாணம் பண்ணும் நிலை வரும் போது . இந்த முடி கொட்டுகிற பிரேச்சனை பெரும் தலைவலி . கல்யாணத்திற்கு முன் வழுக்கை ஆன ஆண்களின் துயரம் . சொல்ல முடியாதது .
இதை அனைத்தும் இளம் வயதில் சந்திக்கும் அனைத்து ஆண்களும் புத்தரை விட மேல் ஆனவர்களாக நான் கருதுகிறேன் .
இந்த 25 வயது தாண்டிய பின்னரே பலரால் ஒரு நடுநிலைக்கு வர இயல்கிறது .
20 முதல் 25 வயது .
ஒரு கல் , சிலையாகும் பருவம் .
~ அரவிந்த் மாணிக்கம்
04.01.2021
காலை - 6.52
No comments:
Post a Comment